” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திங்கள்

ராணி சம்பந்தர்

மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ

சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு வர்ணப் பட்டாடை உடுத்து
சீவிச் சிங்காரித்து மேகக் கூட்டம்
முக்காடிட்டிட சுழன்று வந்திடவே

வான்தேரில் உன்பங்காளி விண்-
மீன் சுற்றிட வெட்கித் தலைகுனிய
தொற்றிடுவோர் கண்கள் கூசிடும்
பூரணச்சந்திராவே மெல்ல மெல்ல
உன் குளிர் மேனி தொட்டு நடந்திட

மென் நடைப் பார்வை பட்டு தன்னடை
கெட்டு மயங்கிடும் சூரிய பகவானோ
ஒளிர்ந்திருந்து பார்வையிட முழுமதியோ
தேய்ந்து வெட்கத்தில் தேய்ந்து பாதி
முகமாகி அரைமதியானாளோ திங்கள் .

Author: