மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

இயற்கை வரமே, இதுவும் கொடையே 73

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-10-2025

இயற்கை வரமே, இதுவும் கொடையே
இவற்றை புரிந்தால் வாழ்வும் நிறைவே
இலவசக் காற்று சுவாசத்தின் சிறப்பே
இம் மண்ணின் பசுமை பெரு வரமே!

விடியலில் செங்கதிரோன் வருகையும்
விடியாத இரவின் அமைதியும்
வண்ணப் பூக்களின் வாசனையும்
வானம்பாடிகளின் இசையும்

காலம் தந்திட்ட தாய்மை இவையே
கண்ணாய் காத்திடல் வேண்டுமே
அழித்திட நினைக்கும் மனிதனுக்கு,
அறிவை புகட்டிட வேண்டாமோ??

இயற்கை வரமே, இதுவும் கொடையே
இவற்றை பேணுவது எம் கடமையே
எதிர்காலத் தலைமுறை நோக்கியே
உலகையே சோலையாக்குவோம்.

Jeba Sri
Author: Jeba Sri

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading