” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இயற்கை வரமே, இதுவும் கொடையே 73

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-10-2025

இயற்கை வரமே, இதுவும் கொடையே
இவற்றை புரிந்தால் வாழ்வும் நிறைவே
இலவசக் காற்று சுவாசத்தின் சிறப்பே
இம் மண்ணின் பசுமை பெரு வரமே!

விடியலில் செங்கதிரோன் வருகையும்
விடியாத இரவின் அமைதியும்
வண்ணப் பூக்களின் வாசனையும்
வானம்பாடிகளின் இசையும்

காலம் தந்திட்ட தாய்மை இவையே
கண்ணாய் காத்திடல் வேண்டுமே
அழித்திட நினைக்கும் மனிதனுக்கு,
அறிவை புகட்டிட வேண்டாமோ??

இயற்கை வரமே, இதுவும் கொடையே
இவற்றை பேணுவது எம் கடமையே
எதிர்காலத் தலைமுறை நோக்கியே
உலகையே சோலையாக்குவோம்.

Jeba Sri
Author: Jeba Sri