இராசையா கௌரிபாலா

பேசாதவர்கள்
—————

நியதிக்குள் சிக்கி நிரந்தரமாய் சிலபேர்
சயனத்தில் ஆழ்ந்து சலித்துப் பலபேர்
சந்தர்ப்பம் அமைந்தும் சரித்திரம் தொலைத்தோர்
பந்தங்கள் இருந்தும் புரிந்து பேசாதோர்

கண்கள் இருந்தும் கதைகள் கூறாது
மண்ணில் வாழ்ந்தும் மரித்தவர்போல் இன்று
உண்மைகள் மறைத்து உறங்காது வாழ்பவர்
எண்ணத்தை அடக்கி என்றுமே பேசாதோர்

தீயவை கண்டு திரும்பாமல் செல்வார்
தூயசிந்தை அற்று திருடன் போலும்
பாசம் நடுவே பாசாங்குடன் வேசம்
பேசாதோர் பேசட்டும் பார்ப்போம் நாமும்.

இராசையா கௌரிபாலா.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading