வரமாகும் வார்ப்புகளே!

நகுலா சிவநாதன்
வரமாகும் வார்ப்புகளே!

வரமாகும் வாய்ப்புகள் வையத்தின் கொடைகள்
உரமாகும் நிலத்திற்கு உள்ளுரப் பசளை
திறனாகும் உழைப்புகளே
தித்திக்கும் வார்ப்புகள்
திசையெங்கும் கிடைத்திடும்
தீந்தமிழின் வார்ப்புகள்

வார்ப்புகள் வண்ணமானால் வையமும் போற்றும்
நாற்றுகள் செழித்தால் நாடே உயரும்
சிப்பி செதுக்கும் சிலையிலும் வார்ப்பு
சிந்தை மகிழும் ஓவியத்திலும் வார்ப்பு
முட்டிமோதி பால்குடிக்கும் கன்றிலும் வார்ப்பு
முழுமனதாய் படைக்கும் படைப்பிலும் வார்ப்புகளே!!

நகுலா சிவநாதன் 1844

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading