மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 215
காலம்

காலத்தின் சுழற்சியால்
எனக்கென மாறிப்போக
கண்ணீருடன் காயங்களையும்
கேள்வியை பதிலாகவும் மாற்றும்

கடந்து வந்த பாதையின்
தவறுகளை நினைவுகளை
அனைத்தையும் உணர்த்தி நின்று
அனுபவங்களை தருவதும் காலம்

சண்டை போட்டு பேசாமல்
இருக்கும் காலம் போய்
பேசினால் சண்டை வரும் என
ஒதுங்கும் காலம் இப்போ

கடந்து வந்த பின்பே
என்னை கலங்கடித்த காலம்
கடுமையான காலம் அல்ல
வாழ்வை வடிவமைத்த காலம்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading