இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 218
உலகின் நிலை மாற என்னென்ன
கொண்டு வருகிறாய்

பிறந்த அன்றே கொண்டு வந்தாய்
கடல் கொந்தளிப்புடன் பூகம்பம்
கடந்த வருடம் தொடங்கிய போரை
கொண்டு செல்கிறாய் தொடர்ந்து

உலகம் முழுவதும் விலையேற்றம்
அகதிகளின் தொகை பெருக்கம்
ஆட்டம் போடும் பொருளாதாரம்
ஆயுதங்களின் எண்ணிக்கை பெருகும்

டி என் எ ஐ வைத்து நோய்களையும்
இறப்பு வரும் நொடியினையும்
செயற்கை புத்திசாலினம் கணிக்குமா
மனிதரை சோம்பேறி ஆக்குமா
வந்த புத்தாண்டே வருக வருக

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan