உணர்வு

ஜெயம்

உள்ளத்தில் தினமும் எழுக்கின்ற அலை
சொல்லப்போனால் இது தூங்காத நிலை
பல நேரங்களில் உண்மையாகவே படைக்கும்
சில நேரங்களில் நம்மையே உடைக்கும்

சொல்லாத வார்த்தைகளை சொல்லச் சொல்லும்
செல்லாத பாதையிலும் செல்லச் சொல்லும்
எத்தனை கதவுகள் மனித மனதிற்கு
அத்தனைக்கும் ஒரே திறவுகோல் உணர்விங்கு

உளத்து ஓவியர் வடிவங்கள் வரையும்
தெளிவாயும், சில மங்கலாயும் தெரியும்
நம்மை தெரியவைக்கும் கண்ணாடியும் இதுவே
நம்மை மறைத்து மூடுவதும் அதுவே

நேரமும் இதை மட்டுப்படுத்த முயலாது
யாரும் அதை கட்டுப்படுத்த இயலாது

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading