திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

உணர்வு

ஜெயம்

உள்ளத்தில் தினமும் எழுக்கின்ற அலை
சொல்லப்போனால் இது தூங்காத நிலை
பல நேரங்களில் உண்மையாகவே படைக்கும்
சில நேரங்களில் நம்மையே உடைக்கும்

சொல்லாத வார்த்தைகளை சொல்லச் சொல்லும்
செல்லாத பாதையிலும் செல்லச் சொல்லும்
எத்தனை கதவுகள் மனித மனதிற்கு
அத்தனைக்கும் ஒரே திறவுகோல் உணர்விங்கு

உளத்து ஓவியர் வடிவங்கள் வரையும்
தெளிவாயும், சில மங்கலாயும் தெரியும்
நம்மை தெரியவைக்கும் கண்ணாடியும் இதுவே
நம்மை மறைத்து மூடுவதும் அதுவே

நேரமும் இதை மட்டுப்படுத்த முயலாது
யாரும் அதை கட்டுப்படுத்த இயலாது

Author:

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading