எண்ணங்கள் கலைந்தன

எண்ணங்கள் கலைந்தன
எண்ணங்கள் கலைந்தன ஏற்றமும் தொலைந்தன

திண்ணங்கள் கரைந்தன தீர்வுகள் தெரியாமல்

வண்ணக் கனவுகளின் வரமுறையும் வழிதவறின

இன்னும் நினைவுகள் இத்தரையில் கீதமாகின

முன்னம் எடுத்த பிறவியின் பலனோ

இன்றும் தொடரும் தலைவிதி என்பதா

என்று தணியுமோ எமது தாகம்

நின்றே பார்ப்போம் நிம்மதி கூடவும்

கண்ணின் மணியில் ஒளியில்லை என்றால்

பார்வையில் மாற்றம் எப்படி அமையுமோ

கனக்கும் இதயம் கேட்கும் கேள்வி

சுணக்கம் கொண்ட இயற்கையின் நியதி

வணக்கம் சொல்லி விடைபெறும் போதிலே

இதுவும் கடக்கும் எதுவும் நடக்கும்

சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading