எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு.
“ஈரம். “ வாரம் 290. ஈரம் உள்ள இதயம்
இருப்பில் அன்பு விளையும்
காரம் பீறும் உணர்வு
கனியத் தருமா உறவு?

வாக்கை கேட்டு வந்து
வடக்கும் கிழக்கும் நின்று
கேட்கும் சலுகை தந்தும்
கிட்டா வெற்றி அன்று.

எம்முள் கூட்டு குலைவு
எதிரும் புதிரும் தொடர்வு
உள் ஆள் குத்து விளைவு
உள்ளே மாற்றான் நுழைவு.

வலிகள் மறந்த நிலையில்
வாக்கை தந்து பகை கை
வலிமை ஓங்கும் வகையில்
வைத்தோம் பார்போம் விளைவை
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading