எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு.
“ஈரம். “ வாரம் 290. ஈரம் உள்ள இதயம்
இருப்பில் அன்பு விளையும்
காரம் பீறும் உணர்வு
கனியத் தருமா உறவு?

வாக்கை கேட்டு வந்து
வடக்கும் கிழக்கும் நின்று
கேட்கும் சலுகை தந்தும்
கிட்டா வெற்றி அன்று.

எம்முள் கூட்டு குலைவு
எதிரும் புதிரும் தொடர்வு
உள் ஆள் குத்து விளைவு
உள்ளே மாற்றான் நுழைவு.

வலிகள் மறந்த நிலையில்
வாக்கை தந்து பகை கை
வலிமை ஓங்கும் வகையில்
வைத்தோம் பார்போம் விளைவை
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading