” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு.
“ஈரம். “ வாரம் 290. ஈரம் உள்ள இதயம்
இருப்பில் அன்பு விளையும்
காரம் பீறும் உணர்வு
கனியத் தருமா உறவு?

வாக்கை கேட்டு வந்து
வடக்கும் கிழக்கும் நின்று
கேட்கும் சலுகை தந்தும்
கிட்டா வெற்றி அன்று.

எம்முள் கூட்டு குலைவு
எதிரும் புதிரும் தொடர்வு
உள் ஆள் குத்து விளைவு
உள்ளே மாற்றான் நுழைவு.

வலிகள் மறந்த நிலையில்
வாக்கை தந்து பகை கை
வலிமை ஓங்கும் வகையில்
வைத்தோம் பார்போம் விளைவை
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan