29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
ஒளவை
சுயம்
******
இறைவன் படைப்பில்
இயங்கும் உயிரில்
மறைவாய் ஒன்று
மிதமாய் இருக்கும்
குறைகள் பலதைக்
கொண்டால் கூட
நிறைவாய் ஏதோ
நிமிர்ந்து நிற்கும்
நிலவும் வானும்
நீரும் மண்ணும்
பலத்தில் தம்மைப்
பிறதாய் எண்ணா
தமக்குள் இருக்கும்
சுயத்தைக் கொண்டு
எமக்கு இன்பம்
என்றும் தருமே
மனிதன் மட்டும்
மனத்தின் குணத்தால்
தனித்த பண்பின்
தரத்தை மறந்து
நினைத்த உடனே
நிறத்தை மாற்றி
அனைத்தாய் மாற
ஆசை கொள்வான்
உனக்குள் இருக்கும்
உண்மை அறிந்து
மனத்தை மாற்றும்
முயற்சி மறந்து
இனத்தின் சுயத்தை
இருப்பாய்க் கொண்டால்
கனதி அற்றுக்
காலம் கடப்பாய்.
ஒளவை.

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...