16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
ஒளவை
சுயம்
******
இறைவன் படைப்பில்
இயங்கும் உயிரில்
மறைவாய் ஒன்று
மிதமாய் இருக்கும்
குறைகள் பலதைக்
கொண்டால் கூட
நிறைவாய் ஏதோ
நிமிர்ந்து நிற்கும்
நிலவும் வானும்
நீரும் மண்ணும்
பலத்தில் தம்மைப்
பிறதாய் எண்ணா
தமக்குள் இருக்கும்
சுயத்தைக் கொண்டு
எமக்கு இன்பம்
என்றும் தருமே
மனிதன் மட்டும்
மனத்தின் குணத்தால்
தனித்த பண்பின்
தரத்தை மறந்து
நினைத்த உடனே
நிறத்தை மாற்றி
அனைத்தாய் மாற
ஆசை கொள்வான்
உனக்குள் இருக்கும்
உண்மை அறிந்து
மனத்தை மாற்றும்
முயற்சி மறந்து
இனத்தின் சுயத்தை
இருப்பாய்க் கொண்டால்
கனதி அற்றுக்
காலம் கடப்பாய்.
ஒளவை.
Author: Nada Mohan
18
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாரம் போனது தெரியாது
வருஷம் ஆனது புரியாது
350 ஆம் வாரம் சொரிந்து
முழுமூச்சாய் மெருகூட்டி
மனமோ...
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...