அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

ஒளியிலே தெரிவது

Vajeetha mohamed

ஒளியிலே தெரிவது

௨டல் விழிப்பின் ௨ற்சாகம்
௨லக விடியலின் சுற்றோட்டம்

எதிர் மறை துடுப்பாட்டம்
எதிர் நிகழ்வின் துடிப்போட்டம்

எம்மை சீர்படுத்தும் பரீட்சை
எம்மை புடம்போடும் இச்சை

சுற்றுச் சூழலின் ௨யிர் நாடி
சூரிய குடும்ப ஒளிச் சாடி

எட்டாத தூரமதில் ஒளியிலே
தெரிவது ஏற்றாத் தீீபம்
தன்னை ௨யர்த்தி அறிவைைப்
பெ௫க்கி ஆழுமையடைவது

கற்ற கல்வியின் ஏற்றம்
ஒளியிலே தெரிவது தன்நம்பிக்கை

பரம்பரையை விதைத்த வித்து
பாரினில் என் முதல் சொத்து

ஒளியிலே தெரிவது என்
மூத்த பெற்றோர் தான்

இயற்கையின் இயக்கம்
இறைசக்தியின் ஒளியிலே தெரிவது
பாரினின் சிறப்பு

Nada Mohan
Author: Nada Mohan