04
Mar
அகிலத்தில் அன்புருவாய் வாழ்ந்து
இகமதில் அறிவுச் சிகரங்களாய்
வாழ வைத்த தெய்வங்கள் அன்னை தந்தை
அன்புக்காக வாழும்...
04
Mar
பெண்ணெனும் பெருமை 05.03.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
பெண்ணெனும் பெருமை (752)
பெண் என்றாலே
பெருமைதான் உலகு
ஆண்...
03
Mar
எங்கே அமைதி
-
By
- 0 comments
தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி...
« கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் »
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர அங்காடிகளில்
ஆரவாரக் குரலழுப்பிய
மக்கள் கூட்டத்தின் நடுவே
அமைதியின் மன்னனை காணவில்லை
வீட்டுக்குள்ளே ஆட்டம் பாட்டம்
விருந்தும் மருந்துமாய்
விழாக்கால கொண்டாட்டம்
வண்ண வண்ண விளக்கொளியிலும்
வடிவழகனைக் காணவில்லை
இங்கும் ஒரு கூட்டம்
இன்னிசை இசைக்க
துள்ளிக் குதிப்போர் நடுவிலும்ம்தூ
தூய பாலனைக் காணவில்லை
ஊரெங்கும் தேடியும்
உத்தமனைக் காணவில்லை
ஊர்தாண்டி வந்த வேளை
ஓர்ஒலை குடிசைகண்டு நின்றேன்
ஒட்டி உலர்ந்த உருவம்
ஒளியிழந்த கண்கள்
பசியால் மெலிந்த
பாவப் பட்ட பையன்
எழுத்தறியா சிறுவனின்
விழி சொன்ன மொழியில்
விழித்துக் கொண்டேன்
தேவ பாலனைக் கண்ட மகிழ்வில்
தொடர்ந்தேன் பயணம்
சிறுவனை அணைத்தபடி.,,,,,,,
நன்றி……
0
்
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...