” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

முதியோர் வாழ்வில் 2164 ஜெயா நடேசன்

அகிலத்தில் அன்புருவாய் வாழ்ந்து
இகமதில் அறிவுச் சிகரங்களாய்
வாழ வைத்த தெய்வங்கள் அன்னை தந்தை
அன்புக்காக வாழும் பெற்றோரை
அரவணைக்க யாருமற்ற அனாதைகளாய்
காப்பகங்களில் வலிந்து அனுப்பும் காலமிது
தன் உதிரத்தையே பாலாக ஊட்டிய தாயை
உழைப்பையே வியர்வையாக்கிய தந்தையை
காலம் முழுவதும் தம் கடமை என பாராது
கடிந்து கொட்டி வாழும் பிள்ளைகள் காலமிது
கொடி கட்டி பறந்து அனுபவம் பெற்ற காலமற்று
தரை தட்டி போய் தடி கொண்டு நடக்கலாச்சு
வலுவிளந்து பலமற்ற நிலையிலே வயதாக
நகைப்பிற்கு ஆளாகி நலிந்து நிற்கையில்
வயதான காலம் வருமோ உணராத இளையோர்
அனுபவத்தால் பலதும் பெற்ற முதியோரை
ஈடாகுமோ மறைந்தும் மறையாத தெய்வங்களை

Author: