முதியோர் வாழ்வில் 2164 ஜெயா நடேசன்

அகிலத்தில் அன்புருவாய் வாழ்ந்து
இகமதில் அறிவுச் சிகரங்களாய்
வாழ வைத்த தெய்வங்கள் அன்னை தந்தை
அன்புக்காக வாழும் பெற்றோரை
அரவணைக்க யாருமற்ற அனாதைகளாய்
காப்பகங்களில் வலிந்து அனுப்பும் காலமிது
தன் உதிரத்தையே பாலாக ஊட்டிய தாயை
உழைப்பையே வியர்வையாக்கிய தந்தையை
காலம் முழுவதும் தம் கடமை என பாராது
கடிந்து கொட்டி வாழும் பிள்ளைகள் காலமிது
கொடி கட்டி பறந்து அனுபவம் பெற்ற காலமற்று
தரை தட்டி போய் தடி கொண்டு நடக்கலாச்சு
வலுவிளந்து பலமற்ற நிலையிலே வயதாக
நகைப்பிற்கு ஆளாகி நலிந்து நிற்கையில்
வயதான காலம் வருமோ உணராத இளையோர்
அனுபவத்தால் பலதும் பெற்ற முதியோரை
ஈடாகுமோ மறைந்தும் மறையாத தெய்வங்களை

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading