கமலா ஜெயபாலன்

ஆறுமோ ஆவல்
கூட்டமாய் நாமும் கூடியே வாழ்ந்ததும்
பாட்டுப் பாடியே பறந்து திரிந்ததும்
தாய்தந்தை பணத்தில் தர்மம் செய்ததும்
வாய்விட்டுச் சொல்ல வார்த்தைகள் இல்லையே
தாயின் மடியில் தலைவைத்துப் படுத்ததும்
பாயில் கூட்டாய் படுத்து உறங்கியதும்
கூட்டஞ் சோறும் குழைத்து உண்டதும்
சாட்டுச் சொல்லி சினிமாவுக்குப் போனதும்
மாறு வேடத்தில் மதிலால் பாய்ந்ததும்
தாறுமாறாகப் பரீட்சை தமிழில் எழுதியதும்
எண்ண ஆறுமோ இதயம் நோகுதே
வண்ண வாழ்க்கை வருமோ வாழ்வில்/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan