நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

கமலா ஜெயபாலன்

ஆறுமோ ஆவல்
கூட்டமாய் நாமும் கூடியே வாழ்ந்ததும்
பாட்டுப் பாடியே பறந்து திரிந்ததும்
தாய்தந்தை பணத்தில் தர்மம் செய்ததும்
வாய்விட்டுச் சொல்ல வார்த்தைகள் இல்லையே
தாயின் மடியில் தலைவைத்துப் படுத்ததும்
பாயில் கூட்டாய் படுத்து உறங்கியதும்
கூட்டஞ் சோறும் குழைத்து உண்டதும்
சாட்டுச் சொல்லி சினிமாவுக்குப் போனதும்
மாறு வேடத்தில் மதிலால் பாய்ந்ததும்
தாறுமாறாகப் பரீட்சை தமிழில் எழுதியதும்
எண்ண ஆறுமோ இதயம் நோகுதே
வண்ண வாழ்க்கை வருமோ வாழ்வில்/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading