அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

கமலா ஜெயபாலன்

ஆறுமோ ஆவல்
கூட்டமாய் நாமும் கூடியே வாழ்ந்ததும்
பாட்டுப் பாடியே பறந்து திரிந்ததும்
தாய்தந்தை பணத்தில் தர்மம் செய்ததும்
வாய்விட்டுச் சொல்ல வார்த்தைகள் இல்லையே
தாயின் மடியில் தலைவைத்துப் படுத்ததும்
பாயில் கூட்டாய் படுத்து உறங்கியதும்
கூட்டஞ் சோறும் குழைத்து உண்டதும்
சாட்டுச் சொல்லி சினிமாவுக்குப் போனதும்
மாறு வேடத்தில் மதிலால் பாய்ந்ததும்
தாறுமாறாகப் பரீட்சை தமிழில் எழுதியதும்
எண்ண ஆறுமோ இதயம் நோகுதே
வண்ண வாழ்க்கை வருமோ வாழ்வில்/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan