நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கமலா ஜெயபாலன்

ஆறுமோ ஆவல்
கூட்டமாய் நாமும் கூடியே வாழ்ந்ததும்
பாட்டுப் பாடியே பறந்து திரிந்ததும்
தாய்தந்தை பணத்தில் தர்மம் செய்ததும்
வாய்விட்டுச் சொல்ல வார்த்தைகள் இல்லையே
தாயின் மடியில் தலைவைத்துப் படுத்ததும்
பாயில் கூட்டாய் படுத்து உறங்கியதும்
கூட்டஞ் சோறும் குழைத்து உண்டதும்
சாட்டுச் சொல்லி சினிமாவுக்குப் போனதும்
மாறு வேடத்தில் மதிலால் பாய்ந்ததும்
தாறுமாறாகப் பரீட்சை தமிழில் எழுதியதும்
எண்ண ஆறுமோ இதயம் நோகுதே
வண்ண வாழ்க்கை வருமோ வாழ்வில்/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan