அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

கமலா ஜெயபாலன்

கவிஞனின் ஆயுதம்
——————————
பாரினில் பாவலர்
பாடிய பாடல்கள்
வேரினும் ஆழமாய்
வேகமாய் ஊன்றும்.
காரிருள் ஆனாலும்
கவிஞனின் எழுதுகோல்
கூரிய முனையால்
கீறிடும் வலிமையாய்/

செந்தழிழ் கொண்டு
செதுக்கிய ஆயுதம்,
சந்துகள் ஓடிச்
சரித்திரம் படைக்க,
எந்தனை ஆளும்
இன்பத் தழிழை,
வந்தனை செய்துமே
வாழ்த்தி வரைவோம்/

பாரதியரும் பரதிதாசனும்
பதமாய் ஆக்கியே,
வீரகாவியம் படைத்த
விந்தையும் கண்டோம்.
தீரமான சிந்தனையால்
தீட்டிய கருத்தும்,
காரமாகி உரைத்துடும்.
கருத்தை உணர்வாய்/

எண்ணத்தை எழுத்தாக்கி,
இதையத்தை கல்லாக்கி,
வண்ணத்தை வரிகளாக்கி,
வார்த்தைகளை தீயாக்கி
விண்ணுலகம் போற்றும்
வீரனின் எழுதகோல்.
கண்ணிற்குள் மணியாய்
காக்குமே கவிஞரை/

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading