கமலா ஜெயபாலன்

பணம்
பணம்
வாழ்ந்து கெட்டவன் வறுமைக்கு அஞ்சினான்
வாழ்வே மாயமென்று வருந்தி அலைந்தான்
மூழ்கியும் எழுந்தும் முழுவதும் அறிந்ததும்
ஊழ்வினை விட்டு உயர்வைக் காண்பான்

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
பிணமும் வாய்திறக்கும் பணமென்றால் பழமொழி
கணமும் உறங்காமல் கட்டிக் காத்து
பிணமாய் போக பின்னால் வருமா

நல்லது செய்து நால்வருக்கு கொடுப்பதே
வல்லது என்பேன் வாய்மையும் அதுவே
சொல்லது சுத்தமாய் சுகமாக வாழ்தல்
உல்லாச வாழ்வில் உயர்ந்தது இதுவே
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

    Continue reading