அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

கமலா ஜெயபாலன்

பணம்
பணம்
வாழ்ந்து கெட்டவன் வறுமைக்கு அஞ்சினான்
வாழ்வே மாயமென்று வருந்தி அலைந்தான்
மூழ்கியும் எழுந்தும் முழுவதும் அறிந்ததும்
ஊழ்வினை விட்டு உயர்வைக் காண்பான்

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
பிணமும் வாய்திறக்கும் பணமென்றால் பழமொழி
கணமும் உறங்காமல் கட்டிக் காத்து
பிணமாய் போக பின்னால் வருமா

நல்லது செய்து நால்வருக்கு கொடுப்பதே
வல்லது என்பேன் வாய்மையும் அதுவே
சொல்லது சுத்தமாய் சுகமாக வாழ்தல்
உல்லாச வாழ்வில் உயர்ந்தது இதுவே
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan