அவர் அருளின் கையொப்பமாய் வாழ்க்கை
-
By
- 0 comments
ஞாலத்தின் கோலம் 744
-
By
- 0 comments
கமலா ஜெயபாலன்
இயற்கை அனர்த்தம்
அன்பின் ஊற்று ஆண்டவன் படைப்பு
அதனால் வாழும் அகிலம் உயர்வாய்
இன்பம் காண்பது இன்னுயர் இயல்பு
இதுவும் படைப்பே இறைவன் நியதி
துன்பம் வந்தால் துவண்டிடும் உயிர்கள்
இயற்கையும் பொய்த்தால் என்செயும் உலகம்
வன்மம் கொண்டு வீசிடும் காற்று
வங்கக் கடலில் அழித்தது தனிஸ்கோடியை
காற்றும் மழையும் கடும் புயலும்
கடுஞ் சினமங் கொன்டு புறப்பட்டால்
நேற்று இன்று எனபது எல்லாம்
நிலையற்றுப் போகும் நிர் மூலமாய்
ஊற்றும் பெருகி உடைத்துப் பெருகி
ஊரை அழிக்கும் உயிரைக் காவும்
வேற்றுமை ஒற்றுமை வேகம் அறியுமா
வழித்து எடுத்து அழித்து முடிக்கும்
பூமிக்குள் வெப்பம் பொங்கி எழுகுது
புதுப்புது நிலநடுக்கம் பூண்டோடு அழிக்குது
சாமிக்கும் தெரியவில்லை சந்ததி அழிவது
சோகம் தான்மிச்சம் சொல்லொனாத் துன்பம்
ஆறு பெருகி அழித்தது இன்னுயர்கள்
ஆறுமோ மனமும் ஆண்டவன் சதியோ
தாறு மாறாய் சடலங்கள் கிடக்குது
தாண்டவம் ஆடிய மண்சரிவால்
இயற்கையே ஆனந்தம் இதுவே அழிவும்
எப்படி வெல்வோம் இயற்கையின் உபாதையை?
வியென்பதா சதியென்பதா/
கமலா ஜெயபாலன்
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments
-
By
- 0 comments