கல்லறைகள் திறக்கும்…

வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்…..
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும் அனுதினமும் எம்மோடு
அவலத்தை விதைத்தது
அனுதினமும் புதைத்தது
எழுந்தனர் வீரர்கள் எமை காக்க தமையீர்ந்தார்
தற்கொடையாய் தகர்ந்தழிந்தார்
உறவுகளை காப்பதற்காய்
உயீர்ந்த உத்தமர்கள்
கனவுகள் மெய்படுமே
கார்த்திகை ஒளியேற்றும்
காந்தமலர் பூத்தூவும்
கல்லறைகள் தாழ்திறவாய்
கண்மணிகாள் கண்திறவாய்.
நன்றி

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading