20
Nov
ஆத்மராகங்கள்
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்…..
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும் அனுதினமும் எம்மோடு
அவலத்தை விதைத்தது
அனுதினமும் புதைத்தது
எழுந்தனர் வீரர்கள் எமை காக்க தமையீர்ந்தார்
தற்கொடையாய் தகர்ந்தழிந்தார்
உறவுகளை காப்பதற்காய்
உயீர்ந்த உத்தமர்கள்
கனவுகள் மெய்படுமே
கார்த்திகை ஒளியேற்றும்
காந்தமலர் பூத்தூவும்
கல்லறைகள் தாழ்திறவாய்
கண்மணிகாள் கண்திறவாய்.
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.