கல்லறைகள் திறக்கும்…

வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்…..
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும் அனுதினமும் எம்மோடு
அவலத்தை விதைத்தது
அனுதினமும் புதைத்தது
எழுந்தனர் வீரர்கள் எமை காக்க தமையீர்ந்தார்
தற்கொடையாய் தகர்ந்தழிந்தார்
உறவுகளை காப்பதற்காய்
உயீர்ந்த உத்தமர்கள்
கனவுகள் மெய்படுமே
கார்த்திகை ஒளியேற்றும்
காந்தமலர் பூத்தூவும்
கல்லறைகள் தாழ்திறவாய்
கண்மணிகாள் கண்திறவாய்.
நன்றி

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading