” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கல்லறைகள் திறக்கும்…

வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்…..
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும் அனுதினமும் எம்மோடு
அவலத்தை விதைத்தது
அனுதினமும் புதைத்தது
எழுந்தனர் வீரர்கள் எமை காக்க தமையீர்ந்தார்
தற்கொடையாய் தகர்ந்தழிந்தார்
உறவுகளை காப்பதற்காய்
உயீர்ந்த உத்தமர்கள்
கனவுகள் மெய்படுமே
கார்த்திகை ஒளியேற்றும்
காந்தமலர் பூத்தூவும்
கல்லறைகள் தாழ்திறவாய்
கண்மணிகாள் கண்திறவாய்.
நன்றி

Author: