கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா

காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம் உன்னிடம் பணிந்தேன்
வித்தைகள் கோடியே விளம்பிடும் வண்ணமே
முத்துக்கள் பரப்பியே மூவுலகும் ஆளுமே
சித்துக்கள் இல்லையே சிந்தையே வசமாக்கி
பற்றுடன் மிளிரும் நிலையே
நற்றமிழ் நவின்றிட நாதமும் ஓங்கிட
கற்றவர் சிறந்திட காற்றாய் வீசிடவும்
உறவாய் ஊற்றாகவே ஊறும்
பொற்புடன் துலங்கும் சான்றே ஏற்றிடு ஏகமனதாய்க் கொண்டு பேராதரவு காட்டியே
வீற்றுமே வருவாள் வீணையுடன் வாணியும்
சாற்றிடு மலர்கள் அவளுக்கே
-சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading