கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா

காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம் உன்னிடம் பணிந்தேன்
வித்தைகள் கோடியே விளம்பிடும் வண்ணமே
முத்துக்கள் பரப்பியே மூவுலகும் ஆளுமே
சித்துக்கள் இல்லையே சிந்தையே வசமாக்கி
பற்றுடன் மிளிரும் நிலையே
நற்றமிழ் நவின்றிட நாதமும் ஓங்கிட
கற்றவர் சிறந்திட காற்றாய் வீசிடவும்
உறவாய் ஊற்றாகவே ஊறும்
பொற்புடன் துலங்கும் சான்றே ஏற்றிடு ஏகமனதாய்க் கொண்டு பேராதரவு காட்டியே
வீற்றுமே வருவாள் வீணையுடன் வாணியும்
சாற்றிடு மலர்கள் அவளுக்கே
-சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading