அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா

காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம் உன்னிடம் பணிந்தேன்
வித்தைகள் கோடியே விளம்பிடும் வண்ணமே
முத்துக்கள் பரப்பியே மூவுலகும் ஆளுமே
சித்துக்கள் இல்லையே சிந்தையே வசமாக்கி
பற்றுடன் மிளிரும் நிலையே
நற்றமிழ் நவின்றிட நாதமும் ஓங்கிட
கற்றவர் சிறந்திட காற்றாய் வீசிடவும்
உறவாய் ஊற்றாகவே ஊறும்
பொற்புடன் துலங்கும் சான்றே ஏற்றிடு ஏகமனதாய்க் கொண்டு பேராதரவு காட்டியே
வீற்றுமே வருவாள் வீணையுடன் வாணியும்
சாற்றிடு மலர்கள் அவளுக்கே
-சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

Continue reading