அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

குதறும் அலைபேசியால் சிதறும் சமுதாயம்

ராணி சம்பந்தர்

அன்றைய காலமதில்
வாசிக்கும் புத்தகமதில்
அகம் முகம் மலர்ந்ததே

இன்றைய கோலமதில்
நேசிக்கும் சத்தகமதில்
சிவந்த அகம் அலறுகிறது

மூளை கொத்த கண் குத்த
கை, கால் விறைக்க உடல்
ஒரே இடம் அமர குளறிய
குடலில் அலைபேசி உளறுகிறது

போர்த்து மூடிக்கொண்டு தலை-
அணையாய்க் கட்டிப் புரளும்
உலைபேசியில் உருண்டு வரும்
புதுப்புது குறுஞ்செய்தி கூதலிட
சீனவெடி போல் வெடித்துச்
சிதறும் சமுதாயம் சிதறுகிறதே.

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading