அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன்

அகத்தினில் இன்பமே

ஆறுவார விடுமுறை
ஓடியே சென்றதே
ஆளுமை குறைந்து
முடங்கிகே போனதே

தாயகம் என்றதும்
தனக்குள்ளே மகிழ்ச்சி
தன்இயல்பு மறந்து
தள்ளாடும் நெகிழ்ச்சி

முப்பதுமுறை பயணம்
முடங்கிய இம்முறை
முன்பனி காலமாய்
முழுநேரம் வீட்டினிலே

அடுத்த வாரமும்
அழகிய பயணமும்
ஆளுமை வரவே
அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன்

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading