கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
சிறுமை கண்டு பொங்குவாய்
——————
சிலர் வாழ்வில் பெருமை வடிவம்
பலர் வாழ்வில் சிறுமையே உருவம்
பணம்பெருகப் பெருக புகழ் உச்சம் தொடும்
பணம் இல்லாதோருக்கு புகழின் படியோ மூடிவிடும்
கர்ம வினை என்று சொல்லி
வறுமை கொடுத்தான் இறைவன்
அதைஅனுபவித்து முடி எனச்
சொன்னான் ஜோதிடன்
காலம் காட்டும் கண்ணாடி அதில்
கோலம்போட்டு காம்ம் லீலை போதை கலந்தது
கலக்கும் மக்களினம் தடம் புரண்டது
காலமோ நிற்காது பாய்ந்து செல்லுது
இந்நிலை கண்ட மனிதம்
பொங்கி எழுகிறது
சிறுமை எனத் தெரிந்தே
செய்திடும் மனிதா திருந்தவே
மாட்டாயா
பொங்கி எழும் பானையில்
சர்க்கரை போட இனிப்பது போல
உன்னை நீயே சீராக்குவாய்
சீராக்கும் நிலை கண்டு இனிக்கட்டும்
வாழ்வு
இல்லையெனில்
உன்சிறுமை கண்டு பொங்குவாய்
ஒருநாள்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading