28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
சிறுமை கண்டு பொங்குவாய்
——————
சிலர் வாழ்வில் பெருமை வடிவம்
பலர் வாழ்வில் சிறுமையே உருவம்
பணம்பெருகப் பெருக புகழ் உச்சம் தொடும்
பணம் இல்லாதோருக்கு புகழின் படியோ மூடிவிடும்
கர்ம வினை என்று சொல்லி
வறுமை கொடுத்தான் இறைவன்
அதைஅனுபவித்து முடி எனச்
சொன்னான் ஜோதிடன்
காலம் காட்டும் கண்ணாடி அதில்
கோலம்போட்டு காம்ம் லீலை போதை கலந்தது
கலக்கும் மக்களினம் தடம் புரண்டது
காலமோ நிற்காது பாய்ந்து செல்லுது
இந்நிலை கண்ட மனிதம்
பொங்கி எழுகிறது
சிறுமை எனத் தெரிந்தே
செய்திடும் மனிதா திருந்தவே
மாட்டாயா
பொங்கி எழும் பானையில்
சர்க்கரை போட இனிப்பது போல
உன்னை நீயே சீராக்குவாய்
சீராக்கும் நிலை கண்டு இனிக்கட்டும்
வாழ்வு
இல்லையெனில்
உன்சிறுமை கண்டு பொங்குவாய்
ஒருநாள்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...