கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
முகமூடி
———
முகமூடி அணிந்த வரே இன்று அதிகம்
முகமின்றிப் பாடுகிறார் பல பதிகம்
நல்ல முகங்களை நாளும் பார்க்கையில்
வெல்ல முடியவில்லை வேசமிட்ட
முகமூடியை
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அறிவின் அளவு செயலில் தெரியும்
உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் நஞ்சும் வைத்தால்
உத்தமர் எனப் பெயர் பெறலாமோ
இவரை நம்பி உள்ளக் கிடக்கையை கொட்டி
இகழ்ச்சிக்கு ஆளாகி அவமானப்பட்டு
இன்னோரன்ன வேதனை அனுபவிப்பது
முகமூடி அணிந்த முதுகெலும்பு அற்றவரினாலன்றோ
மக்களே முகமூடியைக் கழட்டுங்கள்
நல்ல முகங்களைக் காட்டுங்கள்
நல்லவராய் நானிலத்தில் வாழுங்கள்
நாடும் மக்களும் வீடும் நன்மை பெறட்டும்!
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading