” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
முகமூடி
———
முகமூடி அணிந்த வரே இன்று அதிகம்
முகமின்றிப் பாடுகிறார் பல பதிகம்
நல்ல முகங்களை நாளும் பார்க்கையில்
வெல்ல முடியவில்லை வேசமிட்ட
முகமூடியை
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அறிவின் அளவு செயலில் தெரியும்
உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் நஞ்சும் வைத்தால்
உத்தமர் எனப் பெயர் பெறலாமோ
இவரை நம்பி உள்ளக் கிடக்கையை கொட்டி
இகழ்ச்சிக்கு ஆளாகி அவமானப்பட்டு
இன்னோரன்ன வேதனை அனுபவிப்பது
முகமூடி அணிந்த முதுகெலும்பு அற்றவரினாலன்றோ
மக்களே முகமூடியைக் கழட்டுங்கள்
நல்ல முகங்களைக் காட்டுங்கள்
நல்லவராய் நானிலத்தில் வாழுங்கள்
நாடும் மக்களும் வீடும் நன்மை பெறட்டும்!
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan