இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
முகமூடி
———
முகமூடி அணிந்த வரே இன்று அதிகம்
முகமின்றிப் பாடுகிறார் பல பதிகம்
நல்ல முகங்களை நாளும் பார்க்கையில்
வெல்ல முடியவில்லை வேசமிட்ட
முகமூடியை
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அறிவின் அளவு செயலில் தெரியும்
உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் நஞ்சும் வைத்தால்
உத்தமர் எனப் பெயர் பெறலாமோ
இவரை நம்பி உள்ளக் கிடக்கையை கொட்டி
இகழ்ச்சிக்கு ஆளாகி அவமானப்பட்டு
இன்னோரன்ன வேதனை அனுபவிப்பது
முகமூடி அணிந்த முதுகெலும்பு அற்றவரினாலன்றோ
மக்களே முகமூடியைக் கழட்டுங்கள்
நல்ல முகங்களைக் காட்டுங்கள்
நல்லவராய் நானிலத்தில் வாழுங்கள்
நாடும் மக்களும் வீடும் நன்மை பெறட்டும்!
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading