தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
தமிழ்த்தாய்

குலதெய்வத் தாயாக்க் குலம்காக்க வந்தாள்
குழந்தையிலும் நாவினிக்கச் சொல்லாக வருவாள்
கும்பிடுவோம் குழலோசை வழியாகப் பாடி
குலத்தையுமே காத்திடவும் வேண்டிடுவோம் அவளை

புலம்பெயர்ந்து வந்தாலும் பைந்தமிழைப் படித்துப்
பாரிலுள்ள பாலகர்க்குப் பயிற்றுவித்தே நாமும்
பரவசமும் அடைகின்றோம் வளர்ச்சியுமே கண்டு
பிஞ்சுகளும் குஞ்சுகளும் பிழையின்றிக் கற்க

உலகாளும் தாயாக உள்ளமெலாம் நுழைவாள்
உருக்கொண்டும் மயக்கிடுவாள் ஒளிர்ந்துந்தான் நின்றே
ஒருநாளும் மறவேனே என்தாயை மனதால்
உன்னதமாய் நினைத்துந்தான் வணங்கிடுவேன் உன்னை

வலம்வருவாய் பூமியிலே வளமாக நீயும்
வந்தோரை வரவேற்கும் பண்பினையும் ஊட்டி
வாசலிலே கோலமிட்டும் வரவேற்போம் உன்னை
வந்திடுவாய் நொந்தமனம் துலங்கிடவே தாயே….

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading