சக்தி

ராணி சம்பந்தர்

சத்துக்கள் பல உறிஞ்சி
சொத்துச் சேர்த்த சக்தி
முத்துப் போல வலிமை
ஆனது

இயற்கை சூரியக் கதிர்
தெறிச்சுக் கிடைத்த உயிர்ச்
சத்தால் தோல் திடகாத்திரம்
ஆனது

இலைவகை,மரக்கறி, பழம்,
தானியமெனப் பயிரில்
பத்தாக்கி நோய் எதிர்ப்புச்
சக்தி உருவானது

செயற்கையில் நன்மை, தீமை
கருவாக யுக்தி ஆனது
மாந்தரைச் சித்தராக்கி
சுய அறிவைக் கூட்டும்
அன்பின் சக்தி ஆனது

இவற்றை அடக்கிப் பதி பக்தி
தரும் ஆதி பராசக்தியுமே
ஆண்டவனில் ஓர் பாதியே.

Author:

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading