ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர் தங்கள் உறவுகளை
களைந்தனர் தங்கள் உணர்வுகளை அஞ்சாமல்
மதித்தனர் துச்சமென தங்கள் உயிர்களை
துறந்தனர் தங்களையே தமிழினத்து விடுதலைக்காக
காலத்தால் அழியாத காவியங்கள் அவர்கள்
காலம் எல்லாம் பூஷிக்கப்பட வேண்டியவர்கள்
சந்தனப் பேழைக்குள் சமாதியானவர்கள்
காலை வேளையில் உணர்வுகள் கானங்களால்
ஆத்மராகம் ஆகட்டும் அவர்கள் ஆத்மாக்களுக்கு!

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading