சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

தியாகம் பகுதி 2

ஜெயம்

இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்
தாயின் உயிரில் கலந்தது உயரிய தியாகம்
தீயினாலல்ல தூயவள் தன்னையே செய்திடும் யாகம்

அவர்களின் பெயரை கேட்காதே புகழ் உச்சரிக்கும்
அவரருமை மிகு தியாகம் நெஞ்சிலே தரிக்கும்
முற்றிலும் உருகிவிடும் மானுடத்தின் மகத்தான உருவம்
வெற்றியோ அவர் பின்னால் காட்டாரே கருவம்

மனிதன் பெருமை அவன் உயரத்தில் இல்லை
மனிதமே விட்டுச் சென்ற பெருமையின் எல்லை
தியாகம் என்பது செயலல்ல ஒரு சமயம்
சுயநலம் மறப்பின் மேன்மையின் வாழ்வு அமையும்

Author: