” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தடுமாறும் உலகில்

தடுமாறும் உலகில்

தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு
இகமதில் எண்ணம் ஈடேற்றம் கொண்டால்
இத்தரை சிறக்கும் இனிதாகப் பாடுபடு
கண்ணியம் கருத்தாய் காலத்தில் மேம்படவும்
உள்ளத்தில் என்றும் உணர்வு மெய்ப்படவும்
கயமைகள் விரட்டியே கலைமானாக உலவிவரவே
மடமைகளைத் தவிர்ப்பாய் மாநிலம் மகிழவே
ஆளும் நல்லதோர் உரிமை உனக்கேயாகும்
வண்ண நிலவு தோற்பது இல்லையே
வங்கக்கடலும் தூர்வது உண்டா பாரு
சங்கம் வளர்த்து சாதனை செய்வாய்
அங்கமாகவே அகிலத்தில் நடப்பாய் நன்றே
சர்வேஸ்வரி சிவரூபன்

Author: