தடுமாறும் உலகில்

தடுமாறும் உலகில்

தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு
இகமதில் எண்ணம் ஈடேற்றம் கொண்டால்
இத்தரை சிறக்கும் இனிதாகப் பாடுபடு
கண்ணியம் கருத்தாய் காலத்தில் மேம்படவும்
உள்ளத்தில் என்றும் உணர்வு மெய்ப்படவும்
கயமைகள் விரட்டியே கலைமானாக உலவிவரவே
மடமைகளைத் தவிர்ப்பாய் மாநிலம் மகிழவே
ஆளும் நல்லதோர் உரிமை உனக்கேயாகும்
வண்ண நிலவு தோற்பது இல்லையே
வங்கக்கடலும் தூர்வது உண்டா பாரு
சங்கம் வளர்த்து சாதனை செய்வாய்
அங்கமாகவே அகிலத்தில் நடப்பாய் நன்றே
சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading