29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு293
கவியழகு
சிந்தனைப் படகில்
சிலதூரப் பயணத்தில்
சிதறிய துளிகளுள்
சிக்கிய பொறிகள்
எதை நோக்கி
எங்கே போகின்றோம் ?
எண்ணத்தின் விசையுள்
எழுந்தாடும் உணர்வுகள்
விட்டதைப் பிடிக்கவோ
விரைவாகப் பயணம் ?
விழுந்தது தொலைந்ததால்
விளையாடும் விந்தையோ ?
முதிந்த கநியொன்றின்
மண்நோக்கிய பயணம்
மண்ணிற்கு வலியில்லை
மரத்துக்கு வலிக்குமோ ?
மயிர்க்கொட்டி தியானத்தின்
மகிமையாய் வண்ணத்திப்பூச்சி
மனதெல்லாம் கொட்டிடும்
மயிர்க்கொட்டியாய் எண்ணங்கள்
விடிந்திடும் போதங்கு
விழித்திடும் எண்ணங்கள்
விதைத்திடும் வரிகளாய்
விளைந்திடும் கவிதைகள்
உருள்கின்ற உலகமது
உருட்டிடும் காலங்கள்
உருவங்கள் மாறிடினும்
உறங்காமல் ஆன்மாவாய்
கணமொன்று சிந்தித்தால்
கனக்கின்ற உண்மைகள்
காற்றோடு கலந்திந்தக்
காலையில் கவிதையாய் . . . .
சக்தி சக்திதாசன்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...