பண்படுமோ பண்பாடு 759 23.04.2026

செல்வி நித்தியானந்தன் பண்படுமோ பண்பாடு மண்ணிலே பண்பாட்டால் பலருக்கு வேதனை பகுத்தறிவு தொலைத்து பணமழிக்கும் போதனை பள்ளியில்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு293
கவியழகு
சிந்தனைப் படகில்
சிலதூரப் பயணத்தில்
சிதறிய துளிகளுள்
சிக்கிய பொறிகள்

எதை நோக்கி
எங்கே போகின்றோம் ?
எண்ணத்தின் விசையுள்
எழுந்தாடும் உணர்வுகள்

விட்டதைப் பிடிக்கவோ
விரைவாகப் பயணம் ?
விழுந்தது தொலைந்ததால்
விளையாடும் விந்தையோ ?

முதிந்த கநியொன்றின்
மண்நோக்கிய பயணம்
மண்ணிற்கு வலியில்லை
மரத்துக்கு வலிக்குமோ ?

மயிர்க்கொட்டி தியானத்தின்
மகிமையாய் வண்ணத்திப்பூச்சி
மனதெல்லாம் கொட்டிடும்
மயிர்க்கொட்டியாய் எண்ணங்கள்

விடிந்திடும் போதங்கு
விழித்திடும் எண்ணங்கள்
விதைத்திடும் வரிகளாய்
விளைந்திடும் கவிதைகள்

உருள்கின்ற உலகமது
உருட்டிடும் காலங்கள்
உருவங்கள் மாறிடினும்
உறங்காமல் ஆன்மாவாய்

கணமொன்று சிந்தித்தால்
கனக்கின்ற உண்மைகள்
காற்றோடு கலந்திந்தக்
காலையில் கவிதையாய் . . . .

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading