” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு293
கவியழகு
சிந்தனைப் படகில்
சிலதூரப் பயணத்தில்
சிதறிய துளிகளுள்
சிக்கிய பொறிகள்

எதை நோக்கி
எங்கே போகின்றோம் ?
எண்ணத்தின் விசையுள்
எழுந்தாடும் உணர்வுகள்

விட்டதைப் பிடிக்கவோ
விரைவாகப் பயணம் ?
விழுந்தது தொலைந்ததால்
விளையாடும் விந்தையோ ?

முதிந்த கநியொன்றின்
மண்நோக்கிய பயணம்
மண்ணிற்கு வலியில்லை
மரத்துக்கு வலிக்குமோ ?

மயிர்க்கொட்டி தியானத்தின்
மகிமையாய் வண்ணத்திப்பூச்சி
மனதெல்லாம் கொட்டிடும்
மயிர்க்கொட்டியாய் எண்ணங்கள்

விடிந்திடும் போதங்கு
விழித்திடும் எண்ணங்கள்
விதைத்திடும் வரிகளாய்
விளைந்திடும் கவிதைகள்

உருள்கின்ற உலகமது
உருட்டிடும் காலங்கள்
உருவங்கள் மாறிடினும்
உறங்காமல் ஆன்மாவாய்

கணமொன்று சிந்தித்தால்
கனக்கின்ற உண்மைகள்
காற்றோடு கலந்திந்தக்
காலையில் கவிதையாய் . . . .

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan