சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 296 விருப்பு தலைப்பு. சலசலக்கும் ஆற்று நீர் 
சங்கமிக்கும் பூங்காற்று 
சத்தமில்லாதோர் மாலையிலே 

யுத்தம் மட்டும் உள்ளத்தினுள்ளே 
நினைவுகளின் வெள்ளத்தில் 
நீந்த முடியாமலே 

மூழ்குகின்ற பொழுதுகள் 
சயனத்தின் போதும் 
சத்தமில்லாமலே 

முளைக்கின்ற முரண்பாடுகள் 
வாழ்க்கை என்னும் பயணம் 
விளிம்பு வரையும் தூங்கிக் கொண்டே !

வளைந்து செல்லும் பதை 
விளைவுகள் வினைதானோ ? 
விதைத்ததை கிளறிப் பார்ப்பதோ ?

எதை நினைத்துப் புலம்பினாலும் 
அதனோடு தான் முடிவு 
எதை வெளுக்க இங்கு சுய அலசல் ?

எதனோடு உறவு கண்டு 
இதனோடு கலந்து விட்டாய் 
இப்போதும் கூட தப்பான
தாளமென்றால் ?

விளக்க முடியா 
வினாடிகளுக்குள் 
விழுந்து விட்ட 

விட்டில் பூச்சியின் சத்தமில்லா 
ஓலமிது கேட்கிறதா ?
இல்லை அது வெறும் கூச்சலோ ?

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading