இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 296 விருப்பு தலைப்பு. சலசலக்கும் ஆற்று நீர் 
சங்கமிக்கும் பூங்காற்று 
சத்தமில்லாதோர் மாலையிலே 

யுத்தம் மட்டும் உள்ளத்தினுள்ளே 
நினைவுகளின் வெள்ளத்தில் 
நீந்த முடியாமலே 

மூழ்குகின்ற பொழுதுகள் 
சயனத்தின் போதும் 
சத்தமில்லாமலே 

முளைக்கின்ற முரண்பாடுகள் 
வாழ்க்கை என்னும் பயணம் 
விளிம்பு வரையும் தூங்கிக் கொண்டே !

வளைந்து செல்லும் பதை 
விளைவுகள் வினைதானோ ? 
விதைத்ததை கிளறிப் பார்ப்பதோ ?

எதை நினைத்துப் புலம்பினாலும் 
அதனோடு தான் முடிவு 
எதை வெளுக்க இங்கு சுய அலசல் ?

எதனோடு உறவு கண்டு 
இதனோடு கலந்து விட்டாய் 
இப்போதும் கூட தப்பான
தாளமென்றால் ?

விளக்க முடியா 
வினாடிகளுக்குள் 
விழுந்து விட்ட 

விட்டில் பூச்சியின் சத்தமில்லா 
ஓலமிது கேட்கிறதா ?
இல்லை அது வெறும் கூச்சலோ ?

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading