” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 296 விருப்பு தலைப்பு. சலசலக்கும் ஆற்று நீர் 
சங்கமிக்கும் பூங்காற்று 
சத்தமில்லாதோர் மாலையிலே 

யுத்தம் மட்டும் உள்ளத்தினுள்ளே 
நினைவுகளின் வெள்ளத்தில் 
நீந்த முடியாமலே 

மூழ்குகின்ற பொழுதுகள் 
சயனத்தின் போதும் 
சத்தமில்லாமலே 

முளைக்கின்ற முரண்பாடுகள் 
வாழ்க்கை என்னும் பயணம் 
விளிம்பு வரையும் தூங்கிக் கொண்டே !

வளைந்து செல்லும் பதை 
விளைவுகள் வினைதானோ ? 
விதைத்ததை கிளறிப் பார்ப்பதோ ?

எதை நினைத்துப் புலம்பினாலும் 
அதனோடு தான் முடிவு 
எதை வெளுக்க இங்கு சுய அலசல் ?

எதனோடு உறவு கண்டு 
இதனோடு கலந்து விட்டாய் 
இப்போதும் கூட தப்பான
தாளமென்றால் ?

விளக்க முடியா 
வினாடிகளுக்குள் 
விழுந்து விட்ட 

விட்டில் பூச்சியின் சத்தமில்லா 
ஓலமிது கேட்கிறதா ?
இல்லை அது வெறும் கூச்சலோ ?

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan