” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 296
விருப்பு தலைப்பு

இயற்கை அன்னையின்
ஈடில்லா வனப்பினை
கண்குளிர ரசித்திடும்
கவிதைநேரக் கானமிது

மோதிநிற்கும் எண்ணங்கள்
முகில்களாய் கலைந்தோட
வீசிவரும் தென்றலெம்மோடு
விளையாடும் பொழுதிதுவோ

பாய்ந்துவரும் நதியழகும்
பாடிவரும் பறவைகளும்
தேடித்தரும் இதமான
தேனினிமைப் பொழுதன்றோ

பச்சைநிறத் தோரணம்போல்
பாதையெம்க்கும் பச்சையாடை
பாய்ந்தோடும்.நதியெழுந்து
பரவிநிற்கும் வெள்ளைநீராய்

காளையிவன் கண்களிலே
காணுகின்ற காட்சிகள்
காட்டிநிற்கும் வனப்புகள்ஒ
காலமெல்லாம் கூடவரும்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading