சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 296
விருப்பு தலைப்பு

இயற்கை அன்னையின்
ஈடில்லா வனப்பினை
கண்குளிர ரசித்திடும்
கவிதைநேரக் கானமிது

மோதிநிற்கும் எண்ணங்கள்
முகில்களாய் கலைந்தோட
வீசிவரும் தென்றலெம்மோடு
விளையாடும் பொழுதிதுவோ

பாய்ந்துவரும் நதியழகும்
பாடிவரும் பறவைகளும்
தேடித்தரும் இதமான
தேனினிமைப் பொழுதன்றோ

பச்சைநிறத் தோரணம்போல்
பாதையெம்க்கும் பச்சையாடை
பாய்ந்தோடும்.நதியெழுந்து
பரவிநிற்கும் வெள்ளைநீராய்

காளையிவன் கண்களிலே
காணுகின்ற காட்சிகள்
காட்டிநிற்கும் வனப்புகள்ஒ
காலமெல்லாம் கூடவரும்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan