தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

சக்தி சக்திதாசன்

No Comments
மெல்லிய இரவின் வானுக்கு
துல்லிய வெளிச்சம் போட்டது போல்
சிந்திய பாலொளி வெள்ளம் தனை
தந்திட்ட அழகிய வெண்ணிலவே

எத்தனை இரவுகள் நீ கண்டாய்
எத்துணை உறவிற்கு சாட்சியானாய்
இத்தரை மாந்தரின் கனவுகளில்
இன்பமழை பல பொழிந்திட்டாய்

சுற்றிடும் இந்த இகம் தனிலே
சுதந்திரமாய் நீ வலம் வந்தாய்
முற்றிலும் மறைந்திடும் நாளொன்று – நீ
முழுதாய் ஒளிர்ந்திடும் நாளொன்று

இயற்கையின் சுழற்சியின் விதியினிலே
இப்படி நீயும் வளர்ந்து தேய்வாய்
இதயத்தில் உந்தன் எண்னம் கொண்டால்
இத்தனை இன்பம் பொங்குவது ஏனோ ?

எழுந்திடும் வினாக்கள் பலவுண்டு
எந்நெஞ்சில் நிலவுன்னை கேட்பதற்கு
எப்போது நீயும் தரையிறங்கி வருவாய்
என்னுடன் பேசி விடை பகர

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading