“சக்தி”

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_205

“சக்தி”
முப்பெரும்
தேவியில்
முதலான சக்தியே
துர்க்கை இலக்குமி
சரஸ்வதி
மூன்றும் முத்தான சக்தியே
சொத்தென கொள்வோம்!

வீரத்தின்
விதை நிலம்
வீற்றிருக்கும் தாயே
சேற்றில் செந்தாமரையில் உறையும் உத்தமியே
வெண்தாமரையில் வீற்றிருக்கும் வெண்கமல வாகினி!

வெள்ளையனை ஓட ஓட
விரட்டிய சக்தியே
உன் முத்தியால்
பனிச்சம் காய்களால்
பலமாய் வீசியே
விரட்டினாய்
சக்தியே!

வீரவரலாறு
சரித்திரமாய்
உண்டு
வற்றாப்பளையில் பத்தாமிடமாய் பதியமிட்ட தாயே தாயே!

நன்றி
வணக்கம் 🙏

Author:

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading