சர்வேஸ்வரி சிவரூபன்

குருதிப் புனல்
&&&&&&&&&&<<<&

புனல்போல் பாய்கின்றது பறப்பாட்டின் வேகங்கள்
கனலாய் கொதிக்கின்றது பேரழிவின் நிதர்சனங்கள்
சனல்சனலாய் காட்டுகின்றனர் ஆபத்தின் கட்டங்கள்
குருதிப்புனல் தானமென்று குழுவிலே பதிவுகளும்

ஏனையா இந்தக் கொடுமை எகிறிய ஓட்டமேனோ
முக்கிய தேவைக்கு முகம்கோணாமல் கொடுக்கலாம்
பாரையா நாடும் பதைபதைத்தும் போவதை
யாரையா சொல்வது தானாக உணருமட்டும்

வீணாகக் குருதியோ வீதியிலே புனலாகி
கானல்நீராய் கனவுலகில் வாழ்கின்றனர்

பார்போகும் போக்கைப் பாரு
தந்தனத் தன்னானே
சீரில்லா ஓட்டமையா
தந்தனத் தன்னானே
வீறுகொண்ட செயல்களினால்
தந்தனத்தன்னானே
வெடித்துப் பாய்கின்றது
குருதிப் புனலாக…

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading