நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

குருதிப் புனல்
&&&&&&&&&&<<<&

புனல்போல் பாய்கின்றது பறப்பாட்டின் வேகங்கள்
கனலாய் கொதிக்கின்றது பேரழிவின் நிதர்சனங்கள்
சனல்சனலாய் காட்டுகின்றனர் ஆபத்தின் கட்டங்கள்
குருதிப்புனல் தானமென்று குழுவிலே பதிவுகளும்

ஏனையா இந்தக் கொடுமை எகிறிய ஓட்டமேனோ
முக்கிய தேவைக்கு முகம்கோணாமல் கொடுக்கலாம்
பாரையா நாடும் பதைபதைத்தும் போவதை
யாரையா சொல்வது தானாக உணருமட்டும்

வீணாகக் குருதியோ வீதியிலே புனலாகி
கானல்நீராய் கனவுலகில் வாழ்கின்றனர்

பார்போகும் போக்கைப் பாரு
தந்தனத் தன்னானே
சீரில்லா ஓட்டமையா
தந்தனத் தன்னானே
வீறுகொண்ட செயல்களினால்
தந்தனத்தன்னானே
வெடித்துப் பாய்கின்றது
குருதிப் புனலாக…

Nada Mohan
Author: Nada Mohan