” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

சிந்தனை செய் மனமே

ஜெயம்

நேர்மறை எண்ணங்களே வாழ்க்கைக்கு சிறப்பு
எதிர்மறை எண்ணங்களினால் துன்பங்களே பிறப்பு
எண்ணம் போல் வாழ்க்கையென்பதே உண்மை
இதைப் புரிந்துவிடின் வாழ்நாளில் நன்மை

வாழ்க்கை கற்றுக்கொடுக்கின்றது
பாடங்கள் பலவாக
அந்த பட்டறிவே வாழ்க்கையின் பலமாக
வாழ்க்கைக்கு அர்த்தம் காண முடியும்
புரிந்துகொண்டு செய்ற்படின் காலமதும் விடியும்

சாகும் வரையான இந்த வாழ்க்கை
போகும் பாதை எதுவரைதான் நீள்கை
பயனுள்ள வாழ்க்கையை இதுவரை கொண்டோமா
பயமின்றி நாட்களை மகிழ்ச்சியாய் கொண்டாடினோமா

தவறை செய்யாவிட்டால் மனம் பண்பட்டுவிடும்
அன்பை கொடுத்தால் செயல் புனிதமாகிவிடும்
வாழ்க்கையில் பெறவேண்டிய பதினாறையும் பெறலாம்
மனங்கொண்டால் உறுதி அத்தனையும் தரலாம்.

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading