” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிந்தனை செய் மனமே

ஜெயம்

நேர்மறை எண்ணங்களே வாழ்க்கைக்கு சிறப்பு
எதிர்மறை எண்ணங்களினால் துன்பங்களே பிறப்பு
எண்ணம் போல் வாழ்க்கையென்பதே உண்மை
இதைப் புரிந்துவிடின் வாழ்நாளில் நன்மை

வாழ்க்கை கற்றுக்கொடுக்கின்றது
பாடங்கள் பலவாக
அந்த பட்டறிவே வாழ்க்கையின் பலமாக
வாழ்க்கைக்கு அர்த்தம் காண முடியும்
புரிந்துகொண்டு செய்ற்படின் காலமதும் விடியும்

சாகும் வரையான இந்த வாழ்க்கை
போகும் பாதை எதுவரைதான் நீள்கை
பயனுள்ள வாழ்க்கையை இதுவரை கொண்டோமா
பயமின்றி நாட்களை மகிழ்ச்சியாய் கொண்டாடினோமா

தவறை செய்யாவிட்டால் மனம் பண்பட்டுவிடும்
அன்பை கொடுத்தால் செயல் புனிதமாகிவிடும்
வாழ்க்கையில் பெறவேண்டிய பதினாறையும் பெறலாம்
மனங்கொண்டால் உறுதி அத்தனையும் தரலாம்.

Author: