சிவதர்சனி

வியாழன் கவி 1560!
மாற்றத்தின் திறவுகோல்!

மாறாத்தன்மை கொண்ட மாற்றம்
ஏற்றம் நம்மில் தந்திடும் நாளும்
குற்றம் குறைகள் கொண்ட போதும்
கூன் நிமிர்த்த வேண்டுமே மாற்றம்!

சாற்றும் வெற்றி என்னும் சாரல்
சரிதம் ஆக வேண்டும் திறவுகோல்
புரிதல் நம்மில் உயர்ந்திட வேண்டும்
புன்னகை ஒளியே தெறித்திட வேண்டும்!!

இரும்புக்கூட்டு இதயம் தன்னில்
இளகும் அன்பை இணைத்துக் கொள்ள
கலகம் மாறிக் கருணை சிந்தும்
காலம் தோழமை சூடி வெல்லும்!!

விஞ்ஞான மிரட்சி வினைத்திறனாம்
அஞ்ஞான இருளில் அக விழியாம்
பஞ்சமும் பனியாய் மூடிடவே
பரிதவிப்பில் அல்லாடும் மனிதமாம்!

திறவுகோல் நம்பிக்கை என்றிடலாம்
திறக்குமே கொடையெனும் பெட்டகமாம்
பிறக்கட்டும் புதுவித உத்திகளும்
புவனத்தின் தலைவிதி மாற்றிடவே!!
சிவதர்சனி இராகவன்
45/1/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading

    வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

    Continue reading