சிவதர்சனி

வியாழன் கவி 1581!

உருமாறும் புதிய கோலங்கள்!

உருமாறும் புவி மீதில்
எத்தனை எத்தனை கோலங்கள்!
கருவாகி எருவாகும் வரை
மாறாது தொடரும் சாலங்கள்!
தரு மீதில் தவ வான் மீதில்
தகை நெறி மீதில்பரவும் மாற்றங்கள்
சிரம் மீதில் சிகரம் போலும்
ஏற்றம் பெறுமேஎழுச்சி கொள்ளுமே

கொறோனா என வொன்று
எமை வென்று உயிர் தின்றதே-பின்!
உரு மாற்றம் அதில் பல பரிமாணம்
ஊசியேற்றம் உள்ளத் தடுமாற்றம்!
பருவ மாற்றம் அபாய எச்சரிக்கை
அதன் பலாபலனோ பரிதாபம்!
உண்டாகும் போரின் ஆரம்பம்
உக்றைன் உக்கிரமாய்ப் பதற்றம்!

பனிகால இடமாற்றம் பரிமாறும்
விழி பற்பல அழகேற்றம் அரிதாரம்!
பணியோடும் பற்பல கற்பனை சேரும்! களிப்பு பொங்கும் கனியும்!
மனம் மீதில் மகிழ்வு பூக்கும்
மங்களம் பொங்கும் விழா சேரும்!
உருமாறும் புதிய கோலங்கள்
உணர்வாக்கும் உதட்டின் பூக்கள்!
சிவதர்சனி இராகவன்
17/2/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading